Kathir News
Begin typing your search above and press return to search.

வரி உயரும் ! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியால் மக்கள் அதிர்ச்சி !

மேலும், திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். இதற்காகத்தான் நாங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம். ஆனாலும் வரியை உயர்த்த வேண்டியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரி உயரும் ! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியால் மக்கள் அதிர்ச்சி !

ThangaveluBy : Thangavelu

  |  12 Aug 2021 11:20 AM GMT

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவருக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறினார்.

மேலும், திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். இதற்காகத்தான் நாங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம். ஆனாலும் வரியை உயர்த்த வேண்டியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் நாளை (13ம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் தமிழக மக்கள் அமைச்சரின் கருத்தால் பீதியில் உள்ளனர். அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்களின் தலையில் வரியை போட்டு விடுவாரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. எது எப்படியோ நாளை அனைத்திற்கும் முடிவு தெரிந்துவிடும்.

Source: Maalaimalar

Image Courtesy: News 18 Tamilnadu

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/12140558/2910443/Tamil-News-Minister-Palanivel-Thiagarajan-comments.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News