Kathir News
Begin typing your search above and press return to search.

'ரேசன் கடையையே தெரியாதவர்களுக்கு என்ன கவலை?' - அமைச்சர் பி.டி.ஆருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பெரியசாமி!

ரேசன் கடையையே தெரியாதவர்களுக்கு என்ன கவலை? -  அமைச்சர் பி.டி.ஆருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பெரியசாமி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2022 2:19 AM GMT

மதுரை மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது கூட்டுறவுத்துறை தொடர்பாக பேசிய கருத்து தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டுறவு துறையின் செயல்பாடு சிறப்பாக தான் உள்ளது.

ஆனால் கூட்டுறவுத்துறையில் ரேஷன் அரிசி கடத்தல் என பல்வேறு செய்திகள் வருகிறது. கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியை விமர்சத்து அவர் பேசி இருந்ததாக கட்சி தொண்டர்களே அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

பதிலடி

ரேஷன் கடை பக்கம் கூட செல்லாதவர் எல்லாம், கூட்டுறவு துறையில் செயல்பாடு குறித்து பேச வேண்டாம் என அமைச்சர் பெரியசாமி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பான கேள்விக்கு பதில் கூறுகையில், கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்காக மட்டுமே பயணிக்கிறோம் மக்களை திருப்திப்படுத்தினால் போதும் ஒருவேளை ரேசன் கடையையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை என சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News