Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லாத்துக்கும் ஸ்டாலின்தான் காரணம்: அமைச்சர் பொன்முடியின் அடடே விளக்கம்!

எல்லாத்துக்கும் ஸ்டாலின்தான் காரணம்: அமைச்சர் பொன்முடியின் அடடே விளக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2022 7:25 AM GMT

பேரறிவாளன் விடுதலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு செய்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருவாரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார்.

பேரறிவாளன் விடுதலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவரே நமது முதலமைச்சர் ஸ்டாலின்தான், ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் நாங்கள்தான் தீர்மானம் போட்டது என்று பெருமை கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தீர்மானம் போட்டு சும்மாவே இருந்தனர். நாங்கள் ஒரே வருடத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி பேரறிவாளனை விடுதலை செய்தோம். இதற்கு காரணம் ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News