Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் ஸ்டாலின் ராசிக்கு ஏற்ற மரக்கன்றை நட்ட அமைச்சர் சாமிநாதன்!

முதலமைச்சர் ஸ்டாலின் உடைய ராசியை பார்த்து மரக்கன்றை நட்டு வைத்த அமைச்சர் சாமிநாதன். திமுக எப்போதும் கடவுள் மறுப்பு கொள்கையை பேசி வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் பலர் கோயில்களில் பிரார்த்தனை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ராசிக்கு ஏற்ற மரக்கன்றை நட்ட அமைச்சர் சாமிநாதன்!

ThangaveluBy : Thangavelu

  |  22 Nov 2021 10:27 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் உடைய ராசியை பார்த்து மரக்கன்றை நட்டு வைத்த அமைச்சர் சாமிநாதன். திமுக எப்போதும் கடவுள் மறுப்பு கொள்கையை பேசி வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் பலர் கோயில்களில் பிரார்த்தனை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான பிரமலிங்கேஸ்வரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இதனிடையே அந்த கோயில் குளக்கரையில் மக்கன்று நடும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர்.

இதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் ராசியான சிம்ம ராசிக்குரிய பவளமல்லி மரக்கன்றை நட்டு வைத்துள்ளார். மேலும், அமைச்சர் சாமிநாதன் தன்னுடைய ராசியான விருச்சிகம் ராசிக்குரிய தேக்கு மரக்கன்றையும் நட்டு வைத்துள்ளார். அது மட்டுமின்றி எம்.பி. கணேசமூர்த்தியும் தன்னுடைய ராசியான கடம்ப மரக்கன்றையும் நட்டு வைத்துள்ளார். கோயிலில் இருந்வர்கள் ஆச்சரியத்துடன் இந்த சம்பவத்தை பார்த்துள்ளனர். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் ராசி பார்த்து மரம் நடுவது பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Dinamalar

Image Courtesy:Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News