Kathir News
Begin typing your search above and press return to search.

தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியதென்ன?

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.

தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியதென்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jun 2022 11:50 AM GMT

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆராய்ச்சித் துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.


இதற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தரப்பிலிருந்து 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆட்சேபணை கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இப்படி அறநிலையத்துறை ஆய்வு செய்வதும் அதனை தீட்சிதர்கள் எதிர்ப்பதும் ஆக இருந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென சிதம்பரம் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

அதைத்தொடர்ந்து கோவில் உள்ளே அமர்ந்து டீச்சர் தீட்சிதர்களிடையே ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்சிதர்களிடம் எடுத்துரைத்தார் அப்பொழுது அதனை சட்டப்படி எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவரும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் அனைத்து தரப்பினரும் சாதகமான சுமுக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தனர், அரசின் நிலைபாடு இந்து சமய அறநிலைத்துறை சட்டங்கள் குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம் விரைவில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும் சுமுகமான தீர்வு ஏற்பட ஏற்படும் என உறுதி அளித்தார்.


Source - News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News