Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.5 ஆயிரம் கோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பறக்க வேண்டிய காரணம் என்ன? அண்ணாமலை கேள்வி!

ரூ.5 ஆயிரம் கோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பறக்க வேண்டிய காரணம் என்ன? அண்ணாமலை கேள்வி!

ThangaveluBy : Thangavelu

  |  25 March 2022 6:38 AM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தை முன்னிட்டு ரூ.5 ஆயிரம் கோடி ரூபாய் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் தமிழகம் சார்பில் அரங்கை திறந்து வைக்க எதற்காக அத்தனை கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் தலித் இளம்பெண்ணை திமுக பிரமுகர் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று (மார்ச் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாமலை பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின தற்போது துபாய்க்கு தனியாக செல்லவில்லை. அவருடன் ஒரு கூட்டமே சென்றுள்ளது. மேலும், முதலமைச்சர் துபாய் பயணத்தை முன்னிட்டு 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. ஒரு அரங்கத்தை திறந்து வைப்பதற்கு எதற்காக அவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று தனது உரையை முடித்தார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News