Kathir News
Begin typing your search above and press return to search.

சபாஷ் சரியான போட்டி! ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார், மருமகள் போட்டி!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த கிராமத்தை சேர்ந்த சாவித்திரி 43, என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி 61 என்பவரும் போட்டியிடுகின்றனர்.

சபாஷ் சரியான போட்டி! ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார், மருமகள் போட்டி!

ThangaveluBy : Thangavelu

  |  21 Sep 2021 4:34 AM GMT

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த கிராமத்தை சேர்ந்த சாவித்திரி 43, என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி 61 என்பவரும் போட்டியிடுகின்றனர்.

ஒரே சமயத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமின்றி ஒரே குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்று அப்பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News