Kathir News
Begin typing your search above and press return to search.

"நெல்லை தி.மு.க வேட்பாளருக்கு 4 கோடி தேர்தல் செலவுக்கு குடுக்கப்பட்டது" - நெல்லை கண்ணனின் ஒப்புதல்

தி.மு.க சார்பில் 4 கோடி பணம் தேர்தலுக்கு குடுத்ததை அம்பலப்படுத்தியுள்ளார் நெல்லை கண்ணன்.

நெல்லை தி.மு.க  வேட்பாளருக்கு 4 கோடி தேர்தல் செலவுக்கு  குடுக்கப்பட்டது - நெல்லை கண்ணனின் ஒப்புதல்

Mohan RajBy : Mohan Raj

  |  11 Aug 2021 12:15 AM GMT

"கட்சியில் இருந்து 4 கோடி தேர்தலுக்கு அளித்துள்ளனர், ஆனால் தி.மு.க வேட்பாளர் செலவழிக்கவில்லை" என வேட்பாளர் லட்சுமணனுக்கு தி.மு.க சார்பில் 4 கோடி பணம் தேர்தலுக்கு குடுத்ததை அம்பலப்படுத்தியுள்ளார் நெல்லை கண்ணன்.



திருநெல்வேலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன் கூறியதாவது, "திருநெல்வேலியில் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. ஆனால் அவன் தேர்தல் வேலையும் செய்யல. காசும் செலவழிக்கல. அந்த நாயிடம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கல. அவன் எங்கிட்ட சொன்னான், பி.ஜே.பி'காரன் உன்னை ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்றாங்க மாமானு என்கிட்ட சொல்லுறான். அப்ப அவன் எவ்வளவு தப்பான பையன். நான் உடனே ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினேன். ''யோவ் பி.ஜே.பி'க்கு சப்போர்ட்டா பேசுறான்யானு சொன்னேன். கட்சியில் இருந்து, 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர் ஆனால், செலவழிக்கவில்லை. கூட்டணிக் கட்சிக்கும் பணம் தரவில்லை. மனிதநேய மக்கள் கட்சி ரசூல் வீட்டுக்கு வந்தான். சரி நைனாருக்கு ஒரு வாய்ப்பு இருக்கு விடுங்கடானு சொன்னேன்" இவ்வாறு பேசினார் நெல்லை கண்ணன்.

இது குறித்து தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News