Kathir News
Begin typing your search above and press return to search.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி.!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி.!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்.. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதிரடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Feb 2021 6:38 PM GMT

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதியதாக அதிமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி நியமிக்கப்படுவதாகவும், மாவட்ட செயலாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.சி.என். விஜயபாலனும், இணை செயலாளராக செல்வராஜ் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளராக வி.ஜி.கே. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

மேலும், புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கட்சியில் பல்வேறு மாற்றங்களை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், செய்து வருகின்றனர். மேலும், சசிகலாவிடம் யாரும் சென்று விடாமல் பார்த்துக்கொள்வதில் அமைச்சர்களுக்கு தனித்தனியாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News