Kathir News
Begin typing your search above and press return to search.

ரெண்டே முக்கால் கோடிக்கு வாட்ச் மட்டும்...! செந்தில்பாலாஜி எல்லாம் ஜுஜுபி...! வசமா சிக்கிய ஜெகத்ரட்சகன்...

ரெண்டே முக்கால் கோடிக்கு வாட்ச் மட்டும்...! செந்தில்பாலாஜி எல்லாம் ஜுஜுபி...! வசமா சிக்கிய ஜெகத்ரட்சகன்...

Mohan RajBy : Mohan Raj

  |  11 Oct 2023 2:38 PM GMT

ஏழாவது நாளாக எக்ஸ்ட்ரா அதிகாரிகளை போட்டு ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை...! ஆயிரக்கணக்கில் அரசு பணம் வரி ஏய்ப்பு...!

திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகன் ரெய்டு தான் தற்பொழுது தமிழக அரசியலை புரட்டிப் போட்டு வருகிறது, கடந்த வாரங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டுகள் எல்லாம் சாதாரணம். இந்த ரெய்டு தான் பெரிய ரெய்டு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு துவங்கிய ரெய்டு வெறும் செய்தியாக தான் வெளியானது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல ரெய்டில் பிடிக்கப்படும் தொகை மற்றும் கைப்பற்றப்படும் நகைகள், சிக்கிய ஆவணங்கள், கண்டுபிடிக்கப்படும் வரி ஏய்ப்புகள் என ஒவ்வொரு தகவலும் நாளுக்கு நாளும் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.

இதற்க்கு மத்திய அமைச்சராக இருந்த இந்த எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள் என பல தொழில்கள் அடங்கும்.

ஆனால் ஏற்கனவே பலமுறை ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டாலும் இந்த முறை நடத்தப்பட்ட ரெய்டு தான் மிகப்பெரியது என்கிறார்கள். ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக உள்ள புகாரை அடுத்து வருமான வரித்துறை இந்த ரெய்டில் இறங்கிய உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன.

ஜெகத்ரட்சகன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புள்ளி என இந்த ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போது ஜெகத்ரட்சகன் வரியை ஏமாற்றியதற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை பெட்டி, பெட்டியாக தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் கட்டு கட்டாக பணம் அதிலும் குறிப்பாக மத்திய அரசால் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள் அதிகம் இருந்ததும் சோதனையின் போது 4.5 கோடி அளவிற்கு பணம் சிக்கியதும் இரண்டே முக்கால் கிலோ அளவிற்கு தங்கம் பிடிபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டிலிருந்து வெளிநாட்டு கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 2.75 கோடி ரூபாய் மதிப்பு இந்த வெளிநாட்டு கடிகாரங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் 2000 ரூபாய் கட்டுகள் அவரது மகளது வீட்டில் இருந்தும் பிடிபட்டுள்ளது, ஆறாவது நாளை தாண்டி நடக்கும் இந்த ரெய்டு இன்னமும் முடியாது சிக்கும் ஆவணங்கள் எல்லாம் அவ்வளவு உறுதியாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆறு நாட்களில் மட்டும் நாங்கள் கண்டுபிடித்தது ஆயிரம் கோடி ரூபாய் அளவு வரி ஏய்ப்பு இருக்கும் இன்னும் நாட்கள் செல்ல செல்ல ரெய்டு தொடர தொடர இன்னும் வரி ஏய்ப்பு எவ்வளவு செய்தார் என்ன இன்னும் அம்பலமாகும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த ரெய்டு எல்லாம் ஒரு பெரிய ரெய்டுடே கிடையாது. ஆனால் ஜெகத்ரட்சகன் ரெயிடை வைத்து பார்க்கும் பொழுது செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்களை எல்லாத்தையும் விட ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்கள் 10 மடங்கு பெரிது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ரெய்டு எப்பொழுது முடியும் என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை, மேலும் டெல்லியில் இருந்து சிறப்பு வருமான வரி துறையினர் வேறு வந்து இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News