Kathir News
Begin typing your search above and press return to search.

நான் ஏன் வாழனும்? சிறையில் புலம்பி தவிக்கும் கரூர் 'பத்து தல' - சவுக்கு பற்றவைத்த நெருப்பு...

நான் ஏன் வாழனும்? சிறையில் புலம்பி தவிக்கும் கரூர் பத்து தல - சவுக்கு பற்றவைத்த நெருப்பு...

Mohan RajBy : Mohan Raj

  |  7 Nov 2023 3:36 AM GMT

சிறையில் உச்சகட்ட புலம்பலில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கடந்த முறை அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்க குற்றப்பத்திரிக்கையின் காரணமாக இதுவரை 9 முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சிறைக்கு சென்று நான்கு மாதங்களை கடந்து விட்டதால் எப்போது வெளியில் வருவார் என அவரது தரப்பினரும், குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னும் அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்கிறார், அது மட்டுமல்லாமல் அவரது தம்பி அசோக்குமார் வேறு தலைமறைவாக இருக்கிறார் இந்த காரணங்களுக்காகவும் அவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கு நாங்கள் ஆட்சேபிக்கிறோம் என்று நீதிமன்றத்தில் வாதாடி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியில் வராத அளவிற்கு பார்த்துக் கொள்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிறந்தநாள் வந்தது, இந்த பிறந்தநாளின் போது கடந்த ஆண்டு இருந்த கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளபோது கரூர் மற்றும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் அவர் கொங்கு மண்டல பொறுப்பாளர் என்பதால் செந்தில் பாலாஜியின் பிறந்த நாள் பெருமளவில் களை கட்டியது.

ஒவ்வொரு ஊரிலும் திமுக சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது, சென்னையிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், திமுக அமைச்சர்கள் என முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்.

இப்படி சென்ற ஆண்டு கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இந்த ஆண்டு சிறையில் நான்கு சுவற்றுக்குள் செந்தில் பாலாஜி பிறந்த நாளை கொண்டாடும் நிலை ஏற்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் நடைபெற்றது, மற்றபடி சென்ற ஆண்டை போல அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ ஏன் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக இருந்தவர்களோ ஒரு வாழ்த்து கூட சமூக வலைத்தளத்தில் கூட தெரிவிக்கவில்லை.

இது செந்தில் பாலாஜிக்கு கடும் அப்சட்டை ஏற்படுத்தியது, இந்த நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து இல்லாமல் சிறையில் தன்னந்தனியே வாடுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி புலம்பியுள்ளார் என மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

இது குறித்து youtube நேர்காணல் ஒன்றில் சவுக்கு சங்கர் பேசும் பொழுது கூறியதாவது 'அண்ணன் செந்தில் பாலாஜி சிறையில் புலம்புகிறாராம், நான் எதுக்காக இருக்க வேண்டும் நான் வெளியில் வருவதை யாரும் விரும்பவில்லை. முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் நான் வெளியில் வரவேண்டும் என நினைக்கிறார். மற்றபடி யாரும் நினைக்கவில்லை! போன வருஷம் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக களை கட்டியது, ஆனால் இந்த ஆண்டு பெயருக்கு கூட வந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை! வாழ்த்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை நான் மருத்துவமனை பரிசோதனைகளுக்கு செல்லும் பொழுதுதாவது வந்து எப்படி வேண்டுமானாலும் என்னை பார்த்து இருக்கலாம் யாரும் பார்க்க கூட வரவில்லை. நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்னை ஏன் இப்படி திமுகவினர் ஒதுக்கி விட்டார்கள்' என மனக்குமுறலில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி பற்றி அடுத்த வரியில் சவுக்கு சங்கர் கூறும் பொழுது, செந்தில்பாலாஜி கொடுத்த பணத்தின் காரணமாகத்தான் முதல்வர் அவரை வெளியில் வரவேண்டும் என நினைக்கிறார் மற்றபடி முதல்வருக்கு அவர் மீது பாசமெல்லாம் ஒன்றும் கிடையாது எனவும் திமுக செந்தில் பாலாஜியை மறந்து விட்டது விரைவில் கை கழுவி விடுவார்கள் இதன் காரணமாகவே செந்தில் பாலாஜி சிறையில் குமுறி வருகிறார் எனவும் கூறியுள்ளார் சவுக்கு சங்கர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News