Kathir News
Begin typing your search above and press return to search.

மணல் விவகாரத்துல ஒட்டுமொத்தமாக புதைமணலில் சிக்கிய திமுக! இனி ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதாம்....

மணல் விவகாரத்துல ஒட்டுமொத்தமாக புதைமணலில் சிக்கிய திமுக! இனி ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதாம்....

Mohan RajBy : Mohan Raj

  |  24 Nov 2023 2:02 AM GMT

திராவிட மாடல், சமூக நீதி எனக்கூறி நீங்கள் அடித்த கொள்ளை போதும்... பொங்கிய மூத்த பத்திரிக்கையாளர்...

மோடி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, திராவிட மாடல், மதவாதம் உள்ளே நுழையக்கூடாது, தமிழகத்தில் பாஜக நுழைய கூடாது, தமிழகம் ஈவேரா மண், தமிழகம் என்பது அண்ணாவும், ஈவேராவும், கருணாநிதியும் கட்டிக் காத்த மண் என்பது போன்றெல்லாம் அரசியல் பேசி வந்த திமுகவிற்கு தற்பொழுது எதிர்ப்புகள் திமுக தரப்பிலிருந்தே எழ துவங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அமலாக்கத்துறை மணல் ரெய்டு விவகாரத்தில் திமுக ஆதரவு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் திமுகவிற்கு எதிராக பேசிய வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாக உலா வருகிறது, மூத்த பத்திரிகையாளர் மணி சமீபத்தில் தனியார் யூட்யூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது 'மணல் விவகாரம் நாளுக்கு நாள் சீரியஸ் ஆகிக்கொண்டே செல்கிறது, அமலாக்கத்துறை அங்குல அங்குலமாக மணல் எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு மணல் சுரண்டப்பட்டிருக்கிறது, எவ்வளவு வருவாய் அரசுக்கு வரவேண்டியது மறைக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு இழப்பு என நிபுணர்கள் குறிப்பாக ஐஐடியில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள், சாட்டிலைட் உதவியுடன் உள்ள புகைப்படங்களை வைத்து அனைத்தையும் தோண்டி எடுத்துவிட்டனர்.

நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டிருக்கலாம் மணல் என்பது ஜோடிக்கப்பட்ட வழக்கு என ஆனால் அமலாக்கத்துறை ஒவ்வொரு ஆவணங்களையும் கைப்பற்றிக் கொண்டே வருகிறது, விரைவில் இவர்கள் சிக்குவார்கள்! மோடி எதிர்ப்பு என சொல்லிக்கிட்டு நீங்கள் மணலை இப்படி கொள்ளை அடித்துக் குவித்து வைத்தால் அமலாக்கத்துறை விடாது.

நீங்கள் அடிக்கும் கொள்ளையை மறுக்கவும், மறைக்கவும் முடியாது இது மட்டுமல்லாமல் மோடியை எதிர்க்கிறேன் என கூறி சொந்த மாநிலத்தையே சுரண்டியே தின்ற உங்களுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது' எனக் கூறியுள்ளது தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

திமுக ஆட்சி அமைய வேண்டும், திமுக ஆட்சிக்கு வந்தால் தான் சமத்துவம் சமூக நீதி நிலைக்கும் என்றெல்லாம் பேசி வந்த திமுக ஆதரவு பத்திரிகையாளரே நீங்கள் அடித்த கொள்ளை போதும்! மோடி எதிர்ப்பு என்ற பெயரில் மாநிலத்தை சுரண்டி தின்கிறீர்கள் என கூறியது தற்பொழுது இணையத்தில் வைரலாக உலா வருவது ஆளும் திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது, இது மட்டுமல்லாமல் மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதும் விரைவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நெருங்கும் அமலாக்கத்துறை என விமர்சனங்கள் எழுவதும் குறிப்பிடத்தக்க.

இது மட்டுமல்லாமல் திமுகவில் இருக்கக்கூடிய திமுக ஆதரவு பேச்சாளர் குடியாத்தம் குமாரனும் மணல் விவகாரத்தில் துரைமுருகன் 60000 கோடி கொள்ளை அடித்துள்ளார் எனக் கூடிய வீடியோவும் வேறு தற்போது வெளிவந்து ஒட்டுமொத்தமாக திமுக மணல் விவகாரத்தில் சிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த மணல் விவகாரம் குறித்து இதுவரை திமுகவிலிருந்து எந்த ஒரு அமைச்சரும், மூத்த தலைவர்களும் அறிக்கையோ கருத்த கூறாமல் இருப்பது சர்ச்சையை, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளதாக தெரிகிறது.

திமுக ஆட்சி அமைய வேண்டும் திமுக வந்தால் நன்றாக இருக்கும் என கூறிய பத்திரிக்கையாளர் மணியும், திமுகவின் தீவிர ஆதரவாளரான குடியாத்தம் குமரனும் இப்படி மணல் விவகாரத்தில் திமுக சிக்கும்! திமுக ஆட்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது எனக் கூறிய வீடியோ இரண்டும் ஒரே தினத்தில் வெளியானது திமுகவினருக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News