Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக எம்.பிக்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விழுந்த இடி...! மொத்தமும் போச்சு...!

திமுக எம்.பிக்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விழுந்த இடி...! மொத்தமும் போச்சு...!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Nov 2023 2:16 PM GMT

திமுக எம்பிக்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விழுந்த இடி....

கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் செல்லும் பொழுது மக்களால் கேள்வி கேட்கப்பட்டு 'எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்' என கேட்கப்பட்டு விரட்டப்படும் சூழல் இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அவரது தொகுதி திருச்சிக்கு செல்லும் பொழுது அங்கு மக்கள் அவரை நிறுத்தி, இவ்வளவு நாள் வரவில்லை எங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது? என கேள்விகளை முன்வைத்தனர்.

அதனை தொடர்ந்து அடுத்த சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு செல்லும் பொழுது பத்திரிகையாளர்களால் அங்கு கேள்வி கேட்ட சம்பவம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமாவளவனிடம் 'உங்கள் எம்.பி தொகுதியான சிதம்பரத்தில் எங்கே உள்ளது உங்கள் அலுவலகம்? உங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு வாக்களித்த மக்கள் சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டுமா? என்ன செய்தீர்கள் இந்த தொகுதிக்கு?' என கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருமுறை தொகுதி மக்களால் விரட்டப்பட்டார், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஓட்டு கேட்கும் பொழுது உங்களை பார்த்தது அதனை தொடர்ந்து ஆளையே காணுமே? என மக்கள் கேட்கையில் அங்கு மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் காரில் ஏறி ஓடினார்.

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட என்ன செய்தீர்கள் இந்த தொகுதிக்கு? என கேள்வியை பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பி ஜோதிமணியிடம் முன்வைக்கும் போது முழுதாக பேசாமல் காரில் ஏறி எஸ்கேப்பானர்.

இப்படி தொடர்ச்சியாக திமுக கூட்டணி எம்பிக்கள் மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு அதன் காரணமாக அவர்களது சொந்த தொகுதியிலேயே பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறிய அந்த வார்த்தை தான் தற்பொழுது திமுக எம்பிக்களுக்கு மேலும் ஒரு இடியை இறக்கி உள்ளது.

திமுக தரப்பில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை டி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் பேசும் பொழுது 'தொகுதி பங்கீடு தேர்தல் கூட்டணி இவை எல்லாவற்றையும் தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் தான் வேட்பாளராக இருப்பார்! இந்த தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என உறுதி எதுவும் இல்லை. 40 தொகுதிகளிலும் நான் வென்றால் மட்டுமே நாம் கை காட்டும் வேட்பாளர் பிரதமராக வருவார்' என பேசினார்.

ஏற்கனவே தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி, நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா, சிதம்பரம் தொகுதிக்கு திருமாவளவன், தென் சென்னை தொகுதிக்கு டி.ஆர்.பாலு என அந்தந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பிக்கள் மீண்டும் அதே தொகுதியை குறி வைத்து வேலை செய்து வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் தான் வேட்பாளராக இருப்பார்கள், இந்த தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவும் இல்லை என்ற செய்தியை மாவட்ட செயலாளர்களுக்கு கூறுவது போன்று சூசகமாக திமுகவின் எம்பிகளுக்கும் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே தொகுதியில் சென்றால் விரட்டுகிறார்கள் என்ற நிலையில் திமுக கூட்டணி எம்பிகள் சோகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஜெயிப்பவர்களுக்கே சீட்டு என்ற ஒற்றை மெசேஜை முதல்வர் கூறியதன் மூலம் பல திமுக எம்பி களுக்கு இந்த முறை சீட்டு இல்லை என்பதை சூசகமாக சொல்லிவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News