Kathir News
Begin typing your search above and press return to search.

மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது.. பா.ஜ.க தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கருத்து..

மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது.. பா.ஜ.க தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கருத்து..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 April 2024 3:37 PM GMT

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக தற்போது உருவெடுத்து இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பா.ஜ.க எங்கே? என்பது பல்வேறு நபர்களின் கேள்வியாக இருந்தது. நோட்டாவை விடவும் பாஜக குறைவுதான், தேட வேண்டும்? என்று பல்வேறு நபர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் தற்போது நிலைமையை வேறு. தமிழகத்தில் தற்போது பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. இப்போது மாநிலத்தின் மிகப்பெரிய சக்தி ஆளுமையை கொண்ட பெரிய கட்சியாகவும் உருவெடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கு கிடையாது.


தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒரு அங்குல தூரத்தில் தான் இருக்கிறோம். அடுத்த ஆண்டுகளில் அது கட்டாயம் நடக்கும் என்று பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கு. பிரதீப் தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது சமீபத்தில் சாணக்யா டிவி மக்களிடம் கருத்து கணிப்பில் நடத்தி இருக்கிறது அதுவும் குறிப்பாக தமிழகத்தில் எந்த கட்சிகள் முன்னிலையில் வரும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புகளையும் நடத்தியது.


அதில் பாஜக இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் மேற்கோள் காட்டிய பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் பிரதீப் இது பற்றி மேலும் கூறும் பொழுது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாஜக தமிழகத்தில் வலுவான இடத்தை பிடிக்கும் என கூறி உள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News