Kathir News
Begin typing your search above and press return to search.

ஈ.வே.ரா பேத்தி பனிமலர் மனதில் திடீரென எழுந்த இந்து சம்பிரதாயங்கள் : உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

ஈ.வே.ரா பேத்தி பனிமலர் மனதில் திடீரென எழுந்த இந்து சம்பிரதாயங்கள் : உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
X

SushmithaBy : Sushmitha

  |  18 July 2024 3:20 AM GMT

சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்களை போன்று செய்தி வாசிப்பாளர்களும் பிரபலமாகினர். பிரியா பவானி சங்கர், அனிதா மற்றும் லாஸ்லியா போன்றவர்கள் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர்கள். இதில் லாஸ்லியா மற்றும் பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் பயணிக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்தாலும் ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். பிறகு நியூஸ் 7 தொலைக்காட்சியில் வாசிப்பாளராக சேர்ந்து சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதே சமயத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த பனிமலர் பன்னீர்செல்வம் தன்னை ஈ.வே.ராவின் பேத்தி என்று பெருமிதமாக கூறிக் கொள்வார்.

ஏனென்றால் ஈ.வே.ராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகவும், ஈ.வே.ராவின் கருத்துக்களை தான் பின்பற்றுவதாகவும், அதனால் கடவுள் என்ற ஒருவர் கிடையாது. என ஈ.வே.ராவையும் திராவிடத்தையும் பெரும் அளவில் ஆதரித்து இந்து சமய மக்கள் பின்பற்றும் நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் இகழ்ந்து பல நேரங்களில் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தன்னை ஒருவர் தவறாக அழைத்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி திராவிட கட்சிகளுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக ஈ.வே.ராவின் சித்தாந்தங்கள் குறித்த பேச்சுகளை முன்வைத்து வந்த பனிமலர் பன்னீர் செல்வத்தின் உண்மை முகம் தற்போது வெளியாகியுள்ளது.


அதாவது நீண்ட கால தனது நண்பரை திருமணம் செய்து கொண்ட பனிமலர் பன்னீர்செல்வம் வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு மகிழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இவரின் ஐந்தாம் மாதத்திற்கான வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அதில் கை நிறைய வளையல்கள், நெற்றியில் சந்தணம், குங்குமம் என மிகவும் மங்களகரமாக இருந்துள்ளார் பனிமலர் பன்னீர்செல்வம். மேலும் இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெடிசன்கள் பலர் நறுகென்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

அதாவது தமிழ் சினிமா மட்டுமின்றி திரை வட்டாரத்தில் உள்ள சிலர் திமுகவிற்கான ஆதரவை எடுத்து வந்துள்ளனர். ஏன் திமுகவே கடவுள் மறுப்பு மற்றும் இந்து மதத்தை எதிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளிலும், செயல்களிலும், பேச்சுகளிலும் திளைத்து வருகிறது. ஆனால் அவர்களின் குடும்பம் மற்றும் பின்னணியை பார்த்தால் ஆன்மீகத்தில் மூழ்கி இருப்பார்கள். அவர்கள் செய்யும் யாகங்களாக இருக்கட்டும், போகும் கோவில்களாக இருக்கட்டும், செய்யும் பிரார்த்தனைகளாக இருக்கட்டும் அனைத்துமே செய்திகளில் வெளியாகியுள்ளது. இப்படி இந்து சமயத்தையும், இந்து மத நம்பிக்கையையும், கடவுள் மறுப்பையும் முன்னிறுத்தி வருகின்ற திமுகவின் குடும்பத்தினரே கடவுள் நம்பிக்கையில் உள்ளவர்களாக இருக்கும் பொழுது உங்கள் உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தானா என்ற ஒரு பேச்சு பரவலாக இருந்து வந்தது. தற்போது இதே போன்ற செயலை தான் பனிமலர் பன்னீர் செல்வமும் செய்துள்ளதால் உங்களுடைய உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தானா?நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்டு கடவுள் நம்பிக்கையை விட வேண்டும். ஆனால் நீங்கள் மட்டும் அதை பின்பற்றுவீர்களா? என்று கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News