Kathir News
Begin typing your search above and press return to search.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.. டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை மனு..

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.. டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை மனு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Aug 2024 2:18 AM GMT

இந்தியா மற்றும் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் அண்ணாமலை தலைமையிலான மீனவர்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். அப்போது அவர்கள் அங்கு டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான மனுவை வழங்கினர்.


அப்போது ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசியதாகவும் தகவல் வெளியாக்கி உள்ளது. காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் அப்போது மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவாக மீட்டு தர வேண்டும். இந்திய,இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். பணியில் இருக்கும்போது மரணம் ஏற்பட்டால் மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில், விபத்துக்கள் அல்லாத ஆயுள் பாதுகாப்பு திட்டம் வேண்டும் என்றும், மீனவர்களுக்கு டீசலுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News