Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குமூலத்தில் அண்ணனை கோர்த்துவிட்ட முகமது சலீம்....கைதிலிருந்து தப்பிக்க திமுகவிடம் அடைக்கலம்!

வாக்குமூலத்தில் அண்ணனை கோர்த்துவிட்ட முகமது சலீம்....கைதிலிருந்து தப்பிக்க திமுகவிடம் அடைக்கலம்!
X

SushmithaBy : Sushmitha

  |  16 Aug 2024 1:40 PM GMT

உலக நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து கொண்டு போதைப்பொருட்களை கடத்தி வந்த கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை அடுத்து, திமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. ஆனால் இவர் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரோடு மிக நெருக்கமாக ஜாபர் சாதிக் இருந்து வந்தார் என்பதும் சினிமா பிரபலங்கள் சிலருடனும் அதிக நெருக்கம் காட்டி வந்தார் என்பதும் அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு போதைப்பொருள் கடத்தல் மட்டும் இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களிலும் ஜாபர் சாதிக்கு ஈடுபட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வர அமலாக்கத் துறை சட்டவிரோத பல பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் ஜாபர் சாதி கைது செய்தது.

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் சகோதரரான முகமது சலீம்மை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும், அமலாக்கத்துறை முகமது சலீமை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஜாபர் சாதிக்கை தொடர்ந்து முகமது சலீம் கைது செய்யப்பட்டதற்கு திமுக அரசுக்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இவை கௌரவச் சின்னங்கள் அல்ல, அரசுக்கு அவமானம் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், முகமது சலீமை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்த பொழுது, எங்களின் முக்கிய பிரதான தொழிலே ஹெல்த் மிக்ஸ் பவுடர் போன்று வெளிநாடுகளுக்கு சூடோ எபிட்ரின் போதைப் பொருள்களை கடத்துவது தான்! 2015 தொழிலை விரிவு படுத்தி விட்டோம். கைது நடவடிக்கைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே எங்கள் அண்ணன் ஜாபர் சாதிக் திமுகவில் சேர்ந்தார். அதோடு என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் சேர்த்து விட்டார். மேலும் வெளிநாடுகளில் உள்ள போதைப் பொருட்களின் கடத்தல் கும்பலிடம் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து அனுப்பினோம், இதனால் எங்களுக்கு அதிக நம்பிக்கையும் ஏற்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்தி அண்ணன் ஜாபர் சாதிக் சொல்லியபடியே மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தினோம். அதனால் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டோம் என்று ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக ஒரு முறை தன் மீது குற்றமில்லை என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறியிருக்கிறார். ஆனால் தற்பொழுது அவரது சகோதரர் முகமது சலீம் அண்ணன் சொல்லியபடியே இத்தனை வேலைகளை செய்தோம் என்று அனைத்தையும் பட்டியலிட்டு வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும் திமுக மற்றும் விசிக உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருந்தால் தங்களை கையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதற்காக கட்சிகள் சேர்ந்துள்ளோம் என்று வாக்குமூலத்தில் முகமது சலீம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடத்தல் காரர்கள் குற்றவாளிகள் என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வருகிறது என்பது நிரூபணம் ஆகிறதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News