Kathir News
Begin typing your search above and press return to search.

வாரணாசி கோவில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றம்.. இந்து அமைப்பினர் கூறுவது என்ன.?

வாரணாசி கோவில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றம்.. இந்து அமைப்பினர் கூறுவது என்ன.?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2024 3:39 PM GMT

சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரச்சாரத்தை இந்து அமைப்பான சனாதன் ரக்ஷக் தளம் தொடங்கியது. இத்தகைய நடைமுறைகள் இந்து மத நூல்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'சனாதன் ரக்ஷக் தல்' என்ற குழுவின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வாரணாசியில் உள்ள பல கோவில்களில் இருந்து சாய்பாபாவின் சிலைகள் செவ்வாய்கிழமை அகற்றப்பட்டன. இதில், இக்குழுவினர் இங்குள்ள கணேஷ் கோவிலில் இருந்து சாய்பாபா சிலையை அகற்றி, கோவில் வளாகத்திற்கு வெளியே வைத்தனர்.


இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறுகையில், “சாய்பாபாவை சரியான அறிவு இல்லாமல் வழிபடுகிறார்கள், இது சாஸ்திரப்படி தடைசெய்யப் பட்டுள்ளது” என்றார். இதேபோல் அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் பூரி கூறுகையில், “சாய் பாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப் படவில்லை.

இதற்கிடையில், அயோத்தியின் ஹனுமன் கோவிலின் மஹந்த் ராஜு தாஸ் கூறும் போது, "சாய் ஒரு 'தர்ம குரு' மத போதகர், 'மகாபுருஷ்', 'சகா' ஆக இருக்க முடியாது. வாரணாசியில் சாய்பாபாவின் சிலையை அகற்றிய நபருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சாய்பாபா சிலையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

Input & Image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News