Kathir News
Begin typing your search above and press return to search.

பகல் கொள்கையில் ஈடுபடுகிறதா ஆவின் நிறுவனம்? பா.ம.க. தலைவர் குற்றச்சாட்டு..

பகல் கொள்கையில் ஈடுபடுகிறதா ஆவின் நிறுவனம்? பா.ம.க. தலைவர் குற்றச்சாட்டு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Oct 2024 4:46 PM GMT

ஆவின் பச்சை பாக்கெட் பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என்றும், கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது, "தமிழகத்தில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை பாக்கெட் பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து, அதே 9% கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது.


கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது. ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் 500 மி.லி., பாக்கெட்டுகளில் ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மி.லி., பாக்கெட்டுகளில்ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும்.


இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் பாக்கெட்டுகளின் கலரை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் பச்சை பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில், கூடுதல் விலையில் திருச்சி மண்டலத்தில் ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பா.ம.க., தலைவர் அன்புமணி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையில் கூறி இருந்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News