Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை.!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Feb 2025 1:00 PM IST

தமிழகத்தில் பெண்களுக்கு நிலவும் சூழ்நிலை பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளார் ஒரு நபர். ஆத்திரமடைந்த அந்தப் பெண் கண்டித்துள்ளார். அப்பெண்ணெய் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றனர்.


மேலும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளியின் அறக்காவலரே பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. ரயிலாக இருந்தாலும் சரி பள்ளியாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை இச்செயல் காட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் சென்னை கீழம்பாக்கத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் அடிக்கடி நடப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிகழ்கின்றது.

எத்தகைய குற்றங்கள் செய்தாலும் எளிதாக தப்பிவிடலாம் என்று துணிச்சொல் குற்றவாளிகளுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தமிழகப் பகுதிகளில் போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பதே இதற்கு இன்னொரு காரணம் ஆகும்.பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் அவர்கள் மீதான வடக்கு விசாரணை முடியும் வரை அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Input & Image Courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News