காலம் கடந்துதான் புத்தி வருமா?மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அண்ணாமலை சுளீர்!

தமிழக மின்சார வாரியத்தில் சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது என தமிழக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்
அதாவது தமிழக மின்சார வாரியத்தில் சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தற்கால பணியாளர்களை நியமித்து பொதுமக்களிடம் ரூபாய்100 ரூபாய்150 என கட்டணம் வசூலிக்கின்றனர் இது சட்டவிரோதமானது
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்சாரப் பராமரிப்பு தொடர்பான பணிகள் அதிகரிக்கும் பணி நியமனம் மேற்கொள்ளவில்லையென்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்
தேர்தல் வாக்குறுதியில் 3 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பப்படும் 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என இளைஞர்களை ஏமாற்றி மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்று பொதுமக்களையும் ஏமாற்றி விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு எப்போதும் காலம் கடந்துதான் புத்தி வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்