இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழ்நாடு தான்.. பா.ஜ.க மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

கோவையில் தமிழக பாஜக மூத்த தலைவர் H. ராஜா அளித்த பேட்டியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் என் நண்பருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2004 ரூபாய் ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் 56 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று நிர்வாகம் இவ்வாறு பொறுப்பற்றதாக செயல்படுகிறது. பெரும் பான்மையான வீடுகளுக்கு இவ்வாறு தான் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது இதை திமுக எம்.பி.யை மாநகராட்சி கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் இங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கும் உள்துறை அமைச்சருக்கும் கட்டுப்பாடுகள் வேண்டும்.
தமிழக முதல்வருக்கு அரசியலமைப்பு பற்றி தெரிய வேண்டும், நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்துக்கு பணத்தை கூட்டி கொடுக்கவோ குறைத்துக் கொடுக்கவும் முடியாது.ஜி.எஸ்.டி வரிவசூல் செய்யும்போதே 50 சதவீதம் மத்திய நிதியாகவும், 50 சதவீதம் மாநில டி.என்.ஜி.எஸ்.டி ஆகவும் வசூல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி மக்கள் தொகை பொறுத்து நிதி அமைச்சகம் நிதி ஒதுக்குகிறது, ஆனால் இந்தியாவிலேயே மிக அதிகமாக கடன் வாங்கி இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. அதுவும் 2021 இல் திமுக ஆட்சிக்கு வரும்பொழுது 4,33,000 கோடியாக இருந்த கடன் இப்பொழுது 8,88,000 கோடியாக மாறி உள்ளது இது மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே கடனாளி மாநிலம் தமிழகம் தான் என அவர் கூறினார்.