தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்: தமிழக கவர்னர் பதிலடி!

இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்தும் கவர்னரையோ அல்லது பாஜகவ எதுவும் கண்டு கொள்ளவில்லை எதிர்க்கட்சி மற்றும் ஆளும் மாநிலங்களின் கவர்னர்கள் அரசியலமைப்புக்கு எதிரான செயல்களை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அரசியல் பதவி தீர்த்துக் கொள்வதற்கும் இத்தகைய அத்துமீறல்களுக்கு அனுமதி அளிக்கிறது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான தலை அங்கத்தை வைத்து முதல்வர் ஸ்டாலின் கவர்னரை விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.
கவர்னர் மாளிகை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இது பற்றி கூறும் பொழுது, "சுப்ரீம் கோர்ட் முன் விசாரணையில் உள்ள ஒரு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு நாளிதழின் பார்வையை வைத்துக்கொண்டு தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் கவர்னருக்கு எதிராக தமிழக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் வேதனை கூறியது. நமது நாட்டின் நிலை என்னவென்றால் தனக்கு பிடிக்காதவர்கள் மீது விமர்சனங்களை சுமத்துவது. நமது நாட்டில் துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழல்களும் இருக்கின்றன.
உயரிய பதவியில் இருக்கும் நமது முதல்வர், நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே தனது அரசியலமைப்பு பொறுப்பை மதிக்காமல் தவறாக தாழ்த்திப் பேசியுள்ளது வருந்ததக்கது. தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், அரசியல் பாதுகாப்பினை மறைக்கவும் இதை பயன்படுத்தி இருப்பது பரிதாபத்திற்குரியது. தமிழக மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்" என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.