முதல்வருக்கு தான் டப்பிங் தேவை இருக்கிறது: அண்ணாமலை பதிலடி!

அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் முதல்வருக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்கள். இது எங்களுக்கு தேவை இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது, பட்ஜெட்டை பொருத்தவரையில் நேரடி நிதி பகிர்வு என்பது அனைவருக்கும் தெரிந்தது முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீடு திட்டம் விவசாயிகளுக்கான கிஷான் சாமான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசன் செயல்படுத்தப் படுகிறது.
மோடி வந்த பிறகு தான் தமிழகத்திற்கு நிதி பணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த வருடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 10 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே தமிழகம் பெயர் வந்தது ஆறு பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரை இல்லை. தமிழகத்திற்காக 2021 - 22 ஆம் ஆண்டில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கொடுத்தனர். இந்த வருடம் நிதி பிஹாருக்கு கிடைத்துள்ளது. அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம்பெறாது அதை வைத்து ஏன் முதல்வர் அரசியல் செய்ய வேண்டும்.
ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பிஹாரில் வெற்றி பெறப் போகிறோம். லோக் சபா தேர்தலில் தி.மு.க., 7 சதவீத ஓட்டுக்களை இழந்துள்ளார். 2026 தேர்தலில் 20 சதவீதம் ஓட்டுக்களை இழப்பார். மொத்தம் 35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள்.சென்னையில் ஒரு விமானக் கண்காட்சியை ஒழுங்காக நடத்த முடியவில்லை. அதைவிட்டு விட்டு மணிப்பூர் அரசியலைப் பற்றி பேசுகிறார், இவ்வாறு அவர் கூறினார்