டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்:யார் இந்த ரேகா குப்தா?

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்றது அதில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் தன் ஆட்சியை பாஜக கைப்பற்றியதை அடுத்து டெல்லியின் முதல்வர் யார் என்று கேள்வியும் மேலோங்கி இருந்தது ஏனென்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததால் இந்த எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது
இதனை அடுத்து முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏ கூட்டம் பிப்ரவரி 19 இன்று டெல்லியில் நடைபெற்றது இந்த கூட்டம் நடந்த பிறகு யார் முதல்வர் என்று அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது அதன்படி டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்க உள்ளதாக பாஜக தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது
டெல்லியில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா ஷாலிமர்பாக் தொகுதியில் வெற்றி பெற்றவர் இவருக்கு இன்று பிப்ரவரி 20 இல் ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது
யார் இந்த ரேகா குப்தா என்று விசாரிக்கும் பொழுது இவர் நீண்ட அரசியல் அனுபவத்தையும் கல்லூரி காலத்திலிருந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தவராக கூறப்படுகிறது முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உத்தரி பிதாம்புரா கவுன்சிலராக அரசியலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து தெற்கு டெல்லியின் மேயராகவும் பிறகு தேசிய மகளிர் அணி துணை தலைவராகவும் பணியாற்றியவராக கூறப்படுகிறது