Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களை திசை திருப்பவே திமுக இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது:டிடிவி தினகரன் பளீர் பேட்டி!

மக்களை திசை திருப்பவே திமுக இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது:டிடிவி தினகரன் பளீர் பேட்டி!
X

SushmithaBy : Sushmitha

  |  23 Feb 2025 10:31 PM IST

சென்னை அடையாறு கற்பகம் கார்டன்ஸ் முதலாவது பிரதான சாலையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகம் ஒன்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு உள்ளது கொலை கொள்ளை வழிப்பறி பாலியல் குற்றங்கள் போதை கலாச்சாரம் என அனைத்துமே அதிகமாகியுள்ளது

இப்படி தமிழகத்தில் அவலங்கள் அதிகமாகி வருவதை மறைத்து மக்களை திசை திருப்பவே திமுக இந்திய எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இரு மொழிக் கொள்கையை விரும்புகின்றனர் அதே நேரத்தில் மத்திய அரசும் மும்மொழி கொள்கையை அறிவித்துள்ளது மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிர இந்தியை தான் படிக்க வேண்டும் என்று கூறவில்லை

அதனால் இந்த விஷயத்தில் அரசியலைக் கொண்டு வராமல் மத்திய அரசை அணுகி தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இந்தி கற்றுக் கொடுப்பதை தமிழக அரசால் ஒன்றும் செய்ய இயலாது

அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்சிக்கு இணையான தரமான கல்வியை கொண்டு வர வேண்டுமே தவிர மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அரசியல் சொல்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News