மும்மொழி கொள்கை: காங்கிரஸ் கேள்விக்கு அண்ணாமலை கொடுத்த பதில்!

10 ஆண்டுகளாக அரசு பள்ளி கல்வி திட்டத்தை மாற்றவில்லை என்று காங்கிரஸ் எம்.பி சசி காந்த் செந்திலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடிதந்துள்ளார். தனக்கு சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் மும்மொழி கொள்கை என்பது மொழி திணிப்பு, கலாச்சார ஒழிப்பு என்று விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது,
ஹிந்தி தெரிந்திருந்தால்தான் தமிழ் மாணவர்கள் யு.பி.எஸ்.சி CUPSC)தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பொய் கூறியுள்ளார், இதற்கு தாங்கள் முதலில் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வி திட்டத்தை கொண்டு வருவது தானே சமூக நீதி. பத்து வருடமாக அரசு பள்ளி கல்வி திட்டத்தை மாற்றவில்லை. திமுக கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் திராவிடத்தின் பொய்யை மக்களிடம் கூறி வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் திமுகவினர் கட்சியின் அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் நலனுக்காக ஏழை எளிய மக்களின் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் கல்வித்தரத்தை உயர்த்தாமல் இரட்டை வேடம் போட்டு அவர்களை வஞ்சிக்கின்றனர். திமுக கட்சியினரை ஏன் கேள்வி கேட்பதில்லை,இவ்வாறு அவர் கூறினார்.