Kathir News
Begin typing your search above and press return to search.

சமகல்வி என்பது நமது உரிமை: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

சமகல்வி என்பது நமது உரிமை: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2025 11:23 PM IST

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பாஜக மற்றும் திமுக இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஹிந்தி மொழியை திணிப்பதாக மாநில அமைச்சர்களும் அதை மறுக்கின்றனர் மத்திய அமைச்சர்கள். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கை கல்வியை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.


இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை கூறும்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொள்கை குறிப்புகளின் கீழ் வெளியிட்ட தகவலில் 2023 24 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டில் 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு) படிக்கின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 53 லட்சம் பேர் படிக்கின்றனர். மெட்ரிக் பள்ளிகளுக்கு என தனித்துவமான பாடத்திட்டம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தான் தமிழக அரசின் பாடத்திட்டத்தை படிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனக்கு வசதியாக தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் மாநில பாடத்திட்ட பள்ளிகளுடன் இணைத்துக் கொண்டார். இந்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரை மும்மொழி பாடத்திட்டத்தை அனுமதிக்கின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் 50% மாணவர்கள் மும்மொழி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, எஞ்சிய 50% மாணவர்கள் இரு மொழியை மட்டும் படிக்க வாய்ப்பு உள்ளது. திமுகவினர் இரட்டை வேடம் போடுகின்றனர் திமுக எம்.பிகள் மற்றும் எம்.எல்.ஏக்களின் குழந்தைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.இனியும் மக்களை தாங்கள் ஏமாற்ற முடியாது சம கல்வி என்பது நமது உரிமை என அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News