மும்மொழி கொள்கை:அனைவருக்கும் ஒரே நியாயம் வேண்டாமா அண்ணாமலை கேள்வி?

தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பேரக் குழந்தைகள் மூன்று மொழி படிக்கின்றனர், அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களின் குழந்தைகளுக்கு ஒரு நியாயமா, என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியது: மும்மொழிக் கொள்கை தொடர்பாக அமைச்சர் மகேஷ் வெளியிட்ட செய்தியில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் 30 லட்சம் குழந்தைகள் மட்டுமே மும்மொழியில் படிக்கின்றனர் என்று உள்ளார்.மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அவர் கணக்கில் சேர்க்கவில்லை.
திமுக அரசு டாஸ்மார்க் மது விற்பனை மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. 2026 ம் ஆண்டு தேர்தலுக்காக பணத்தை எல்லாம் எல்லா தொகுதிகளிலும் பதுக்கி வைத்து வருகின்றனர்.மும்மொழிக் கொள்கையை அறிவு உடையவர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் என தியாகராஜன் கூறியதற்கு, அண்ணாமலையின் பதில், உங்களது மகன் இந்திய குடிமகனா அல்லது அமெரிக்க குடிமகனா? உங்களது மகன் மும்மொழி சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம்.
தமிழகத்தில் எல்லா அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் எல்லோரும் மும்மொழியில் தான் படிக்கின்றனர். இதனால்தான் நாங்கள் சமக் கல்வியை கேட்கிறோம்.டாஸ்மார்க் போல தமிழகத்தில் உள்ள கல்வித்துறை அனைத்தும் திவால் ஆகி இருக்கிறது. தமிழகத்தில் ஆங்கில மொழியில் அதிகம் மாணவர்கள் படிக்கின்றனர் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, எவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.