அனைத்து பாகிஸ்தானியர்களையும் நாடு கடத்துங்கள்:அமித் ஷா எடுத்த அதிரடி நடவடிக்கை!

By : Sushmitha
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர் மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த பயங்கரவாதிகளில் நான்கு பேரில் வரைபடங்கள் வெளியிடப்பட்டு அவர்களை கண்டறியும் முயற்சியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
முன்னதாக இந்தியா பாகிஸ்தான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு இப்படி போர் பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்
ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக அந்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார் என்று என்.ஐ.ஏ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
