அறிவிப்புகளை அரசியல் ரீதியில் பார்க்காமல் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பார்க்க வேண்டும்:நிர்மலா சீதாராமன்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில அமைச்சர்களும் ஜி எஸ் டி கவுன்சிலில் உள்ளனர் நடுத்தர மக்கள் மீது வரி விதிக்கப்படவில்லை ஜிஎஸ்டிக்கு முன்பாக வாட் வரி மாநிலங்களில் சுங்கவரி உட்பட பல வரிகள் இருந்தது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியை சேர்த்து தான் ஜிஎஸ்டி வந்துள்ளது ஆனால் ஜிஎஸ்டிக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு என்று கூறியுள்ளார்
மேலும் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்த பிறகு அதில் திமுக வெற்றியை தேடுகிறதா அக்கட்சி தான் சமத்துவம் என்கிறது அதனால் அக்கட்சி ஜாதியை பற்றி பேசக்கூடாது அனைத்திடுமே அரசியல் ரீதியாக லாபத்தை தேட முயற்சிக்கக் கூடாது இன்றும் தமிழகத்தில் ஜாதி பெயருடன் பலகைகள் பொறிக்கப்படுவதை பார்க்கிறேன் அரசியல் ரீதியாக பார்க்காமல் ஒரு அறிவிப்பை கிடைக்கும் தரவுகள் மூலம் பின் தங்கிய மக்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என யோசிக்க வேண்டுமே தவிர நாங்கள் வென்றோம் தோற்றோம் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும் என பேசி உள்ளார்