தமிழக பா.ஜ.க தலைவரிடம் பிரதமர் மோடி சொன்ன விஷயம் தெரியுமா.?

தமிழக பா.ஜ.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், சமீபத்தில் டெல்லி வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு காளை மாடு ஒன்றை பிரதமருக்கு பரிசாக வழங்கினார். குறிப்பாக ஒரு தலைவரை சந்திக்க போகின்றோம் என்றால், நம்முடைய நினைவாக அவர்களுக்கு பரிசுகளை வழங்குவது நடைமுறையில் இருந்து வரும் ஒரு நிகழ்வு தான். அந்த வகையில் தமிழக பாஜக புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நைனார் நாகேந்திரன் முதல் முதலாக தலைவரான பிறகு பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதன் காரணமாக ஜல்லிக்கட்டு காளை சிலை ஒன்றே பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.
அப்பொழுது பிரதமர், "காங்கிரஸ் எப்படி ஜல்லிக்கட்டை எதிர்த்தது? 'ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு' என, அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கூறியதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்' என, நாகேந்திரனிடம் கூறினாராம் மோடி.
ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர பன்னீர்செல்வமும், பழனிசாமியும் எப்படி உதவினர் என்பதையும் நினைவு கூர்ந்தாராம் மோடி. காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டை எதிர்த்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.