மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பயணித்த கார் விபத்து:திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்-நயினார் நாகேந்திரன்!

மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா பயணித்த கார் விபத்திற்குள்ளானதற்கு திமுக அரசின் மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் நல பணிகளில் தொடரும் தமிழக அரசின் மெத்தன போக்கும் அலட்சியமும் கவனக்குறைவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் தெளிவாக தெரிகிறது தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான நட்டா நிகழ்ச்சியை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் விரைந்து பொழுது வண்டலூர்-மீஞ்சர் சாலை அருகே அவர் பயணித்த கார் பழுதடைந்து சிறு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது
மத்திய அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும் பொழுது அந்தந்த மாநில அரசுகள் தான் அவர்கள் தங்குமிடம் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அளிக்க வேண்டிய கடமை கொண்டிருக்கிறது ஆனால் விருந்தினர்களைப் போற்றும் தமிழர் மரபு திமுக மாடலில் இல்லை ஓட்டுனரின் திறமையால் மத்திய அமைச்சரும் நானும் உயிர் தப்பினோம்
பளபளக்கும் பாதுகாப்பு வாகனத்தில் கோடிகளை இறைத்து நிரப்பிய செக்யூரிட்டி உபகரணங்களுடன் பயணிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலிற்கு தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர்கள் மற்ற கட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ப்ரோட்டோகால் வாகனங்களையும் வழங்க வேண்டியது திமுக அரசின் தலையாயக் கடமை என்பது தெரியாதா அல்லது தனது குடும்ப வாரிசுகளை தவிர வேறு எவருடைய பாதுகாப்பையும் முதல்வர் முக்கியம் என கருதவில்லையா
தமிழக அரசு வழங்கிய பழுதடைந்த பிரோட்டோக்கால் வாகனத்தால் மத்திய அமைச்சரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்திருக்கும் திமுக அரசின் இந்த பொறுப்பற்ற செயலால் தமிழகத்தின் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்