Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக நீதியை படுகொலை செய்து விட்டு, பெயரை மட்டும் சுட்டினால் போதுமா? முதல்வருக்கு அன்புமணி கண்டனம்!

சமூக நீதியை படுகொலை செய்து விட்டு, பெயரை மட்டும் சுட்டினால் போதுமா? முதல்வருக்கு  அன்புமணி கண்டனம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 July 2025 12:25 PM IST

சமீபத்தில் தமிழகத்தின் நடக்கும் படுகொலை குறித்து சமூக நீதி என்பது இல்லை என்றும் அதனை சமூக நீதி ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு அதற்கு பரிகாரம் கேளுங்கள் வகையில் சமூக நீதி என்று பெயர் சூட்டினால் போதுமா என்று தமிழக அரசிடம் பாமக செயல் தலைவர் அன்புமணி கண்டனத்தை பெறுவது இருக்கிறார். பின் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறும் பொழுது, "தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.


வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழகத்தில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகா, பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1,193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல், சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது தி.மு.க., அரசு. முதல்வர் ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்... சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News