Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? முதல்வரிடம் அண்ணாமலை கேள்வி?

பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? முதல்வரிடம் அண்ணாமலை கேள்வி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 July 2025 11:03 AM IST

அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மது போதையில் அவர் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது இது தொடர்பாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை இப்படி இருந்தால், மாணவர்களின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும்? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர். ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.


ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ, இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார். உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News