Kathir News
Begin typing your search above and press return to search.

மொட்டை மாடியில் படித்த அரசு பள்ளி மாணவர்கள்,நயினார் நாகேந்திரன் முன்வைத்த கேள்வி!வெளியான அறிவிப்பு!

மொட்டை மாடியில் படித்த அரசு பள்ளி மாணவர்கள்,நயினார் நாகேந்திரன் முன்வைத்த கேள்வி!வெளியான அறிவிப்பு!
X

SushmithaBy : Sushmitha

  |  13 July 2025 5:28 PM IST

சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படித்த காணொளியை பகிர்ந்து பள்ளிக்கல்வித்துறைக்கு என வருடந்தோறும் ஒதுக்கப்படும் ரூ40,000 கோடி ரூபாய் என்ன ஆனது சொந்த விளம்பரத்திற்காகக் காட்டும் அக்கறையில் சிறிது கூட அரசுப் பள்ளி மாணவர்களின் மீது காட்ட முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார்

இந்த நிலையில் தற்போது திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மக்கள் தங்கள் அன்றாடப் பிரச்சனைகளுக்காக வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தினாலோ அல்லது மக்கள் முன்பு தங்கள் அலட்சியப்போக்கு அம்பலப்பட்டாலோதான் திமுக அரசு குறைகளை சரிசெய்வதற்கான அறிவிப்பையே வெளியிடுகிறது யாரோ ஒருவர் பின்னிருந்து கீ கொடுத்து இயக்கும் பொம்மையைப் போல இயக்கிக் கொண்டே இருந்தால்தான் முதல்வர் அவர்கள் இயங்குவார் போல

தமிழகத்தில் இதுபோன்று அடிப்படை வசதிகளற்று இருக்கும் பல கல்வி நிலையங்களை எண்ணும்போது பெருங்கவலையாக உள்ளது.அப்படி கேட்பாரற்று கிடக்கும் பள்ளிகளை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு மக்கள் முன்பு அம்பலப்படுத்தினால் தான் அவையும் சரிசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எண்ணினால் அதையும் செய்ய நான் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News