Kathir News
Begin typing your search above and press return to search.

கட்சி கூட்டத்திற்கு கடைகளில் மாமூல் வசூல்! நல்லா கல்லா கட்டும் தி.மு.க! ஆட்டத்துக்கு முடிவுரை எழுதிய முதல்வர் எடப்பாடி!

கட்சி கூட்டத்திற்கு கடைகளில் மாமூல் வசூல்! நல்லா கல்லா கட்டும் தி.மு.க! ஆட்டத்துக்கு முடிவுரை எழுதிய முதல்வர் எடப்பாடி!

கட்சி கூட்டத்திற்கு கடைகளில் மாமூல் வசூல்! நல்லா கல்லா கட்டும் தி.மு.க! ஆட்டத்துக்கு முடிவுரை எழுதிய முதல்வர் எடப்பாடி!

Muruganandham MBy : Muruganandham M

  |  11 Jan 2021 7:45 AM GMT

அதிமுக அரசு தொடர்ந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஸ்டாலின் மட்டும், கழக ஆட்சியில் ஏதுமே நடைபெறவில்லை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு எதுவும் செய்யவில்லை என்கிறார்.

திமுக ஒரு அராஜகக் கட்சி. அந்த அராஜகக் கட்சி மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது. நாட்டில் கட்டப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கி விடும். கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டுமென்றால் மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும். ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்.

கட்டப் பஞ்சாயத்து செய்யும் கட்சி நாட்டிற்குத் தேவையா? ஜாதி, மதச் சண்டைகள் இன்றி, அரசியல் அராஜகமின்றி தமிழகம் இப்போது அமைதியாக இருக்கிறது. அப்படி அமைதியாக இருக்கையில், இப்படிப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ விடமாட்டார்கள்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் நோட்டைத் தூக்கி வந்து கடைகள்தோறும் வசூல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் ஒருவராக, மக்களில் ஒருவராக இருந்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, அம்மா ஆட்சி தொடர்ந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, அம்மா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News