Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் - வானதி சீனிவாசன் பரபரப்பு தகவல்

சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் - வானதி சீனிவாசன் பரபரப்பு தகவல்

ThangaveluBy : Thangavelu

  |  28 April 2022 1:27 PM GMT

சட்டமன்றத்தில் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களைதான் சொல்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சென்னையில், சட்டமன்ற வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டப்பேரவையில் பெட்ரோல், டீசல் பற்றி காங்கிரஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை பேசியுள்ளனர். மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி இருப்பதாக கூறியுள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்யும் பட்டியலில்தான் இந்தியா உள்ளது. அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இதனால் ஒரு லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என அறிக்கை கூறுகிறது.

மேலும், தமிழகம் கடந்த நவம்பர் மாதம் முதல் 2800 கோடி ரூபாய் வாட் வரியாக பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் வருவாயை மத்திய அரசு வீட்டிற்கு ஒன்றும் எடுத்து செல்லவில்லை. கடந்த ஆண்டு மட்டும் 24 சதவீத வரி வருவாயை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. எப்போதும் மத்திய அரசு வரியை குறைத்ததில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News