Begin typing your search above and press return to search.
தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.!
தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.
By : Thangavelu
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து ஒன்றை கூறியிருந்தார். அதாவது பாஜக கூட்டணி வைத்தால் அதிமுக ஆட்சியை இழந்தது என கூறியிருந்தார்.
Next Story