Kathir News
Begin typing your search above and press return to search.

32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்.. பா.ஜ.க.வின் புதிய யுக்தி.!

32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்.. பா.ஜ.க.வின் புதிய யுக்தி.!

32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்.. பா.ஜ.க.வின் புதிய யுக்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 8:00 AM GMT

பா.ஜ.க., வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு 32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகளை வாக்குச்சாவடி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை பா.ஜ.,வின் வாக்கு வங்கியாக மாற்ற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 32 பேருக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் 50 சதவீதம் அதாவது 16 வாக்குகளை பா.ஜ.,விற்கான வாக்கு வங்கியாக மாற்றுவது கட்டாயம்.

இதில் சமுதாய தலைவர்கள் பட்டியல், முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை தயாரித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடையும் வகையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில தலைமை உத்தரவுப்படி தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News