Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடியுடன், இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடியுடன், இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2021 6:47 AM GMT

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.


இந்நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு பேரும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், தமிழக நலன்சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் குறித்து பேசுவதற்காகவே அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர் என்று பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News