Kathir News
Begin typing your search above and press return to search.

புகழேந்தி அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு!

பெங்களூரு புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

புகழேந்தி அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு!

ThangaveluBy : Thangavelu

  |  14 Aug 2021 11:26 AM GMT

பெங்களூரு புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பெங்களூரு புகழேந்தியை அக்கட்சியில் இருந்து தலைமை நீக்கியது. இதனையடுத்து புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 24ம் நாள் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் இரண்டு பேரும் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சியின் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றுக்கு முரணாகச் செயல்பட்டதால்தான் புகழேந்தியை நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Polimer

Image Courtesy: Polimernews

https://www.polimernews.com/dnews/152938/பெங்களூர்-புகழேந்தியின்அவதூறு-வழக்கை-ரத்து-செய்யகோரி-இபிஎஸ்-,-ஓபிஎஸ்-சென்னைஉயர்-நீதிமன்றத்தில்-மனு

Next Story
கதிர் தொகுப்பு
Trending News