வைத்திலிங்கம், கே.பி.முனுசாமியின் எம்.பி., பதவி ராஜினாமா ஏற்பு.!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தில்ங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனிடையே இருவரும் தங்களின் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தில்ங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனிடையே இருவரும் தங்களின் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை எம்.பி., பதவிகள் காலியாக உளளது. அதிமுகவை சேர்ந்த முகம்மது ஜான் என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையும் சேர்த்து மூன்று எம்.பி., இடங்கள் காலியாக உள்ளது. இந்த மூன்று இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
அப்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களும் தற்போதைய எம்.எல்.ஏ.க்களுமான வைத்திலங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர்களின் ராஜினாமா கடிதங்கள் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வழங்கப்பட்டது. இரண்டு பேர்களின் ராஜினாமா கடிதங்களையும் அவைத் தலைவர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.