வெற்றி வேல்.. வீர வேல்.. மதுரை மக்களே நல்லா இருக்கீங்களா? என்று பரப்புரையை தொடங்கிய பிரதமர் மோடி.!
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.
மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, வெற்றி வேல்.. வீர வேல் என்ற உரையுடன் தொடங்கினார். மதுரை மக்களே நல்லா இருக்கீங்களா? என்று தமிழில் பேசினார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. சிறப்பு வாய்ந்த தமிழ் கலாச்சாரத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. முதன் முதலில் தமிழுக்கு சங்கம் வைத்தது மதுரைதான். மேலும், முத்துராமலிங்கத் தேவருக்கு என்னுடைய வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.