பென்னாகரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணிக்கு பெருகும் ஆதரவு: தோல்வி பயத்தில் சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ.!
பாமக வேட்பாளர் ஜி.கே.மணி இதற்கு முன்னர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அனைத்து கிராமங்களிலும் அவர் செய்த நலத்திட்ட உதவிகளுக்கான கல்வெட்டுகள் இன்றுவரை சாட்சியாக உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது.
அதே போன்று திமுகவில், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அதே போன்று பென்னாகரம் தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.
அந்த தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.வும், தற்போதையை வேட்பாளருமான இன்பசேகரன் போட்டியிடுகிறார். கடந்த முறை வெற்றி பெற்ற பின்னர் அவர் தொகுதியில் பார்ப்பதே அதிசயம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இதுவரைக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தொகுதியில் நிறைவேற்றவில்லை என்பது அவர் மீதான குற்றசாட்டாக உள்ளது.
ஆனால் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி இதற்கு முன்னர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அனைத்து கிராமங்களிலும் அவர் செய்த நலத்திட்ட உதவிகளுக்கான கல்வெட்டுகள் இன்றுவரை சாட்சியாக உள்ளது.
இதன் காரணமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஜி.கே.மணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தொகுதி முழுவதிலும் உள்ள மக்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று காலை முதலே பென்னாகரம் தொகுதிகுட்பட்ட கிராமங்களில் பிரசாரத்தை தொடங்கி தனக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் இன்று தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் பேருந்தில் தனக்காக துண்டு பிரசுரத்தை பயணிகளிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சியான பாஜக, அதிமுக, தமாகா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதே போன்று ஏரியூர் பகுதியில் பாமக தொண்டரின் தேனிர் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வித்தியாசமான முறையில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த முறை திமுக எம்.எல்.ஏ.வுக்கு தோல்விதான் மிஞ்சும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணி மிகப்பெரிய பலத்துடன் உள்ளது. தருமபுரியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிப்பெறுவது உறுதி.