Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. எம்.பி. ரமேஷ் வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம்! ராமதாஸ் வரவேற்பு!

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தி.மு.க. எம்.பி. ரமேஷ் வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம்! ராமதாஸ் வரவேற்பு!

ThangaveluBy : Thangavelu

  |  27 Sep 2021 9:17 AM GMT

கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் முந்திரியின் ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராஜி தாக்கப்பட்டு உயிரிழந்தது தற்போது தெரியவருகிறது.


இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கோவிந்தராஜி என்ற தொழிலாளி உடல் முழுக்க காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image Courtesy: Minnambalam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News