Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி !

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி !

ThangaveluBy : Thangavelu

  |  15 Sep 2021 5:00 AM GMT

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இது வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சி தலைமை நிர்வாகிகள், 9 மாவட்ட துணை பொதுச்செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்தினர். கூட்டத்தில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்றும், நாளையும் மனுக்கள் பெறப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Pmk

Next Story
கதிர் தொகுப்பு
Trending News