Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் அலுவலகம் ரூ.7.50 கோடி.. ஓ.எல்.எக்ஸில் பதிவிட்ட 4 பேர் அதிரடி கைது.!

பிரதமர் அலுவலகம் ரூ.7.50 கோடி.. ஓ.எல்.எக்ஸில் பதிவிட்ட 4 பேர் அதிரடி கைது.!

பிரதமர் அலுவலகம் ரூ.7.50 கோடி.. ஓ.எல்.எக்ஸில் பதிவிட்ட 4 பேர் அதிரடி கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2020 4:46 PM GMT

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் அமைந்துள்ள வாரணாசி அலுவலகத்தை மர்ம நபர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் விற்பனைக்கு என்று ஓஎல்எக்ஸில் ரூ.7.50 கோடி என்று விளம்பரம் வெளியிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர்கள் போட்டோ எடுத்து, அதனை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., என்னும் இணையதளத்தில் ரூ.7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை வைத்துக்கொண்டு நடத்திய விசாரணையில், தவறான ஐடி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், குஜராத்தில் உள்ள பிரமாண்டமான 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் ஒருவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News