Kathir News
Begin typing your search above and press return to search.

நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக தி.மு.க. இருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்!

நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திமுக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக தி.மு.க. இருக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்!

ThangaveluBy : Thangavelu

  |  14 Oct 2021 4:24 AM GMT

நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திமுக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை சேரந்தவர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது வாக்குகளை மக்கள் பதிய விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், வாக்குச்சாவடிகளை கைபற்றி வெற்றி பெற்று விடலாம் என்று திமுகவினர் நினைத்திருந்தனர். இந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. திமுகவின் கடந்த காலங்களை பார்த்தால் ஒருபக்கம் எதிர்ப்பார்கள் மற்றொரு பக்கம் ஆதரிப்பார்கள். ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை முதலில் ஆதரித்தனர். தற்போது எதிர்க்கிறார்கள். இவர்கள் நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக விளங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: News 7 Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News