Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் ஆடியோவால் அதிர்ச்சியடைந்த மம்தா.!

இந்தி பேசும் ஒரு கோடி மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள். அது மட்டுமின்றி இடதுசாரி ஆதரவாளர்கள் கூட 10 முதல் 15 சதவீதம் பேரும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோர் ஆடியோவால் அதிர்ச்சியடைந்த மம்தா.!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2021 6:11 PM IST

மேற்கு வங்கத்தில் பாஜகதான் வெற்றி பெறும் என்று அரசியல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசியலை புரட்டிப்போட்டுள்ளது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சியான திரிணமுல் காங்கிரசுக்கு தேர்தல் பணிகளை பிரசாந்த் கிஷோர் மேற்பார்வையிட்டு வருகிறார். அவர் வகுத்துக் கொடுக்கும் வியூகங்களை மம்தா பானர்ஜி கடைப்பிடித்து வருகிறார். மேற்கு வங்கத்தில் தற்போது 4வது கட்டத் தேர்தல் நடந்துள்ளது.





இன்னும் 4 கட்ட தேர்தல் உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட ஆடியோ மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டு இலக்கத்தில் வெற்றி பெற்று விட்டாலே தேர்தல் பணியில் இருந்து விடுபட்டு விடுகிறேன் என்று ஐபேக் நடத்தும் பிரசாந்த் கிஷார் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் 'மேற்கு வங்கத்தில் பாஜக தான் வெற்றி பெறும்' என பேசியதாக மூத்த தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் மோடி மீது எந்த அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலையும், மம்தா கட்சி ஆட்சி நடத்திய 10 ஆண்டுகாலத்தில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. மம்தா மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.





மேலும், சிறுபான்மை ஆதரவு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. பட்டியிலின மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு செல்கிறது. இந்தி பேசும் ஒரு கோடி மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள். அது மட்டுமின்றி இடதுசாரி ஆதரவாளர்கள் கூட 10 முதல் 15 சதவீதம் பேரும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.

50 முதல் 55 சதவீத இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கே உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார். இந்த ஆடியோ விவகாரத்தால் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வருகின்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற பேச்சு மேற்கு வங்க மாநில மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News